புதன், 26 ஜனவரி, 2022

கொண்டும் கொடுத்தும்.


முனைவர. பழ.முத்தப்பன்,

    முன்னாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி


சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகும். திருப்பல்லாண்டில் இரண்டாவது பாடல் ,

ஷஷமிண்டு மணத்தவர் போமின்கள் 

மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி

ஈசற்கு ஆட்செய் மின்'

என்பது அப்பாடலின் முன்பகுதியாகும்.   மதம் கொண்ட மனத்தவர்கள் அகலுங்கள், மெய்யடியார்கள் விரைந்து வாருங்கள். இறைவனின் அருளை ஏற்றுக் கொண்டு உடலையும் உயிரையும் இறைவனுக்கு அடிமையாக்கி வாழுங்கள் என்பதுபாடல் பகுதியின் பொருளாகும். இப்பாடற் பகுதியின் மூலம் ஆன்மாக்கள் இறைவனின் அருளைப் பெற்று, இறைவனுக்கு ஆட்பட வேண்டும் என்பது வலியுறுத்தப் பெறுகிறது ஆனால். ஆன்மாவுக்குக் கூறப்பட்ட இச்செய்தி இறைவனுக்கு ஆகிய முறைமையைச் சுந்தரர் வரலாற்றில் காண முடிகிறது. அதாவது சுந்தரர் பெருமானைத் தோழமையாகக் கொண்டு இறைவன் அவருக்கு ஆட்செய்தமையைச் சுந்தரர் வரலாற்றின் பல நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே இறைவன் சுந்தரரிடம் nகொண்டும் கொடுத்தும் எவ்வாறு விளங்கினான் என்பதைச் சிறிது சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


தோழமை கொள்ளல்:

ஓலை காட்டி இறைவன் திருவெண்ணெய் நல்லூரில் ஆட்கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களையும் வழிபட்டுச் சுந்தரர் திருவாரூர் திருத் தலத்திற்கு வருகிறார்.  திருத்தலத்து இறைவனாம் புற்றிடங்கொண்டாரை வணங்கிப் பதிகம் பாடிப் போற்றினார்.  அப்பொழுது ஒரு வாக்கு எழுந்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் சுந்தரர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். 

ஷஷவாழிய மாமறை புற்றிடங் கொள்

மன்னவன் அரனருளால் ஒரு வாக்கு

தோழ மையாக உனக்கு நம்மைத்

தந்தனம் ' (பா121    )


என்று சே;கிகிழார் கூறுவதால் ; சுந்தரரை இறைவனே விருப்பமுற்றுத் தோழமையாக்கிக் கொண்டான் என்பது புலனாகின்றது.  சுந்தரர் இறைவனைத் தோழமையாகக் கொள்ள வேண்டும் என்று நிகழ்வு சுந்தரிடம் அமையாது இறைவனே சுந்தரரைத் தோழமையாகக் கொண்டார் என்று நிகழ்வைச் சேக்கிழார் அமைக்கிறார்.  இவ்வாறு அவர் அமைப்பதற்கு ஆதாரம் சுந்தரர் பாடிய திருநள்ளாற்றுப் பதிகத்தில் அமைந்த, 

ஷஅடியற்கு எளிவந்த தூதனைத் 

தம்மைத் தோழமை அருளி

தொண்டனேன் செய்யும் துரிசுகள் பொறுக்கும்

நாதனே' ( பா  )


2


என்று பாடிய பகுதி அமைகிறது.  எனவே சுந்தரரை இறைவன் தோழமையாகக் கொண்டான் என்பது பெறப்படுகிறது.  இவ்வாறு தோழமையாகக் கொண்ட இறைவன் எத்தகைய அருளைக் கொடுத்தான் என்பதைச் சுந்தரரின் வரலாற்றுச் செய்திகள் மூலம் சேக்கிழார் பல நிகழ்வுகளைத் தருகிறார். 

தந்தை, மாமன் உறவு:

திருவாரூரில் சுந்தரர் தங்கியிருந்த பொழுது பரவை நாச்சியாரைத் திருக் கோயிலில் சந்திக்கிறார். பரவையாரும் சுந்தரரை நோக்கினார். இருவரின் உள்ளத்திலும் காதல் அரும்பிற்று. காதல் வேட்கையால் சுந்தரர் இறைவனிடத்தில் பரவையைத் திருமணம் புரிந்து  கொள்ள உதவ வேண்டுகிறார்.  பரவையைத் திருமணம் செய்து கொள்ள மானிடர்களை நாடாது இறைவனை நாடிய சுந்தரரின் செயல் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.  சுந்தரரின் வேண்டுகோளை ஏற்ற இறைவன் கனவில் சுந்தரரிடம், 

ஷஷமன்னும் புகழ் நாவலர்கோன் மகிழ

மங்கை பரவை தன்னைத் தந்தோம்

இன்ன இவ்வகை நம்அடியார் அறியும்

படியே உரைசெய்தனம் என்று அருளி' (பா50.  )


என்று அருளியதாகச் சேக்கிழார் குறிப்பிடுவார். இதன்படி இறைவன் தாமே பரவையாருக்குப் பெற்றோராகிச் சுந்தரருக்குப் பரவையை மணம் முடிக்கும் நிகழ்வை நிகழ்த்தியருக்கிறான் எனத் தெரிகிறது.  இவ்வாறு சேக்கிழார் பாடுவதற்குச் சுந்தரரின் திருவொற்றியூர் பதிகப் பாடல் அடிப்படையாக அமைகிறது. 

ஷஷஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு இடனாய்

மாழை ஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை' (பா.   )


என்பது அப்பாடற் பகுதியாகும்.  சுந்தரரின் பரவையைத் தந்து என்ற தொடர் சேக்கிழார் பரவை தன்னைத் தந்தோம் என்று பாட வழிவகுத்தது எனத் தெரிகிறது.  எனவே மணப்பெண்ணைப் பெற்றோர் இன்றித் தாமே தருகின்ற அளவிற்குத் தந்தை, மாமனாய் உறவு முறையை இறைவன் சுந்தரருக்கு வழங்கியமை பெறப்படுகிறது. 


ஒப்பந்தக்காரர் பணி:

சுந்தரர் வரலாற்றில் இறைவன் சுந்தரருக்காகப் பல செயல்களைச் செய்திருக்கிறான். அதில் ஒன்று குண்டையூர் நெல்லை இறைவன் திருவாரூரில் நிரப்பிய பணி குறிப்பிடத் தக்கதாகும்.  இந்தச் செய்தியைச் சுந்தரர் பாடல் மூலமாகவும், சேக்கிழாரின் கவி மூலமாகவும் நடந்த நிகழ்வுகள் தற்கால ஒப்பந்தக் காரர் (கான்ட்ராக்டர்) பணியை நினைவூட்டுகிறது. 

இறைவனிடத்தில் சுந்தரர் ஷஷநீளநினைந்தடியேன் 'எனத் தொடங்கிக்' குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன்,ஆளில்லை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே' என வேண்டுகிறார்.  சுந்தரரின் வேண்டுகோள் இறைவன் மூலம் நடைபெறாது அவனின் ஆட்கள் மூலம் நடைபெற வேண்டுவது போல அமைகின்றது. இதனைக் கொண்டு சேக்கிழார் பெருமான் இந்த நிகழ்வைப் படைக்கும் பொழுது கீழ்வரும் தொடர்களை அமைக்கிறார். 

ஷஷபகற்பொழுது கழிந்ததன்பின் பரவைமனை 

அளவின்றி ஆரூர் நிறையப்

புகப்பெய்து தருவன நம் பூதங்களென

விசும்பில் நிகழ்ந்தது ஒரு வாக்கு'(பா.ஏய.21   )


என்பன அக்கவித் தொடர்களாகும். இன்றைய ஒப்பந்தக்காரர்கள் கட்டிடத்திற்குரிய பொருள்களைப் போக்குவரவுக்கு இடையூறு இல்லாமல் இரவுப் பொழுதில் கட்டும் கட்டிடத்திற்கு முன்னே எவ்வாறு நிரப்புவார்களோ, அதுபோலச் சேக்கிழார் பகற்பொழுது கழிந்து என்று குறிப்பிட்டு; இரவுப்பொழுதில் நெல்லைக் கொண்டு வந்து திருவாரூரில் சேர்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.  மேலும் ஒப்பந்தக்காரர்கள் தங்களுடைய தொழிலாளிகள் மூலம் பொருள்களை ஏற்றி இறக்குவார்கள் என்பதற்கேற்பச் சேக்கிழாரும் தருவன நம் பூதங்கள் என்று குறிப்பிட்டுச் சிவபெருமானின் பூதப் படைகள் அத்தொழிலைச் செய்யும் என்று குறிப்பிடுகின்றார்.  இத்தகைய அமைப்பு இன்றைய ஒப்பந்தக்காரர்களின் பணியை நினைவு படுத்துவதால் இறைவன் சுந்தரருக்கு ஒப்பந்தக்காரர் அடிப்படையில் நெல்லை ஏற்றி இறக்கியிருக்கிறார் எனத் தெரிகிறது. 


செல்வழித்துணை: (டூரிஸ்ட்டர்)


சுந்தரர் திருபபுறம்;பயத்தில் இருந்து திருமுதுகுன்றம் செல்ல முற்படுகின்றார். செல்லும் வழியில் திருக்கூடலையாற்றூர் திருத்தலம் உள்ளது. ஆனால் சுந்தரர் அத் திருத்தலத்திற்குச் செல்லாது நேரே திருமுதுகுன்றம் செல்வதற்கு முற்படுகின்றார். அந்த நேரத்தில் இறைவன் அவரைக் கூடலையாற்றூர் திருத்தலத்தை வணங்கச் செய்ய வேண்டும் என்று நினைந்து வேதியர் வடிவில் சுந்தரருக்கு எதிரே செல்கின்றான். அவரிடம் சுந்தரர் திருமுதுகுன்றத்திற்கு வழிகேட்க, அவருக்கு இது திருக்கூடலையாற்றூர் செல்வதற்கு வழி என்று கூறி அவரை அந்நகருக்கு அழைத்துச் சென்று விடுகிறார்.  இச்செயல் இன்றைய டூரிஸ்ட்டரின் செயல் போல் அமைந்துள்ளது என்பது சேக்கிழாரால் தெரிய வருகிறது. வேதியரிடம் சுந்தரர் ,

ஷஷஇன்றுயாம் முதுகுன்றம் எய்தவழி எமக்கியம்பும்

குன்றிமல்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏறச்

சென்றது இவ்வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல' (பா.120  )


என்று கேட்டதற்கு விடை கிடைத்ததாகச் சேக்கிழார் குறிப்பிடுவார்.  இதில் சுந்தரருக்கு இறைவன் செல்வழித் துணையாய்ச் சென்றார் என்று குறிப்பிடுவது இங்கே டூரிஸ்ட்டர் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு ஏற்ற தமிழ்ச் சொல்லாக அமைந்து , தோழமை ஏற்ற சுந்தரருக்கு இறைவன் செல்வழித்துணைப் பணி செய்து அருள் கொடுத்தது பெறப்படுகிறது. 


காவல்துறை:ப் பணி:

சேரமான் பெருமாள் அளித்த செல்வத்தோடு திருவாரூர்க்குப் புறப்பட்ட சுந்தரரை வழியில் வேடர்கள் தடுத்துச் செல்வத்தைப் பறித்துச் சென்றனர்.  இந்நிகழ்வைக் கூறவந்த சேக்கிழார் , 

ஷஷபொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன்கொடுப்ப தல்லால்

ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்

பெருகருளால் தாம்கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம்'(பா.கழ 185

என்று குறிப்பிடுவார். இந்நிகழ்வுமுலம் சேக்கிழார் இன்றயைக் காவல்துறைப் பணியை நினைவு படுத்துகிறர்.  அதாவது இழந்த பொருள்களை இன்றையக் காவல் துறையினர் பறித்துச் சென்றவரிடம் இருந்து பெற்று, இழந்தவர்களிடம் கொடுப்பதைத் தங்கள் பணியாகக் கொள்வார்கள்.  அதுபோலத்தான் இறைவனும் வேடர்களைத் தானே அனுப்பிப் பறிக்கச் செய்து மீண்டும் சுந்தரருக்குக் கொடுக்கிறான். தாமே  ஆட்கள மூலம் பறிப்பதும் பின் கொடுப்பதும் ஆகிய செயலை இறைவன் ஏன் செய்தான்? என்று சேக்கிழார் சிந்தித்து ஓர் கருத்தை இப்பகுதியின் மூலம் வெளிப்படுத்துகிறார். அதாவது தான் தோழமையாகக் கொண்ட நண்பனுக்குத் தான்தான் பொருள் கொடுக்க வேண்டுமே தவிரச் சுந்தரன் மற்றவர் கொடுக்கக் கொள்வதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கோ இவ்வாறு பறித்துக் கொடுத்தான் என்று சேக்கிழார் தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இப்பகுதியைப் படிக்கும் பொழுது சேக்கிழாரின் பெருமை உள்ளத்தில் மகிழ்வைத் தருகிறது. எனவே சுந்தரரைத் தோழமையாகக் கொண்டு இறைவன் காவல்துறைப் பணியையும் செய்து அருள் கொடுத்திருக்கிறான் எனத் தெரிகிறது. 

இதுபோலச் சுந்தரரைத் தோழமையாகக் கொண்ட இறைவன் வங்கிப் பணியைத் திருக்கச்சிமேற்றளியில் சுந்தரருக்கு வேண்டும் பொருளைக் கொடுத்து நிகழ்த்தியதும், வலக்கண் இடக்கண்களைக் கொடுத்து மருத்துவப் பணியாளராக அருளியதும் , தாய்மை உறவாகப் பொதிசோறும், வீடு தோறும் இரந்த உணவும் கொடுத்து தாய்மை உறவைச் சுந்தரரோடு ஏற்படுத்திக் கொண்டதும், தூதுவராகத் திகழ்ந்ததும் அரிய செயல்களாக அமைந்து, சுந்தரர் வாழ்க்கையில் இறைவன் கொண்டும் கொடுத்ததைக் காணமுடிகிறது இதனால் .இக்கால வாழ்வியலோடு சுந்தரரின் வாழ்வியல் செய்திகளை ஒப்பிட்டுக் காணமுடிகிறது. திருமுறையின் சிறப்பும் வெளிப்படுகிறது. 

திருச்சிற்றம்பலம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக